ஆன்மிகம்

இலந்தவிளை தூய திருக்குடும்ப ஆலய தனிப்பங்கு உதயவிழா நாளை நடக்கிறது

Published On 2017-05-22 11:04 IST   |   Update On 2017-05-22 11:04:00 IST
இலந்தவிளை தூய திருக்குடும்ப ஆலயம் தனிப்பங்காக உதயமாகும் விழா நாளை (செவ்வாய்க் கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
திங்கள்நகர் அருகே இலந்தவிளையில் தூய திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் முரசங்கோடு பங்கின் கிளை பங்காக 53 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஆலய மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தனிப்பங்காக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆலயம் தனிப்பங்காக உதயமாகும் விழா நாளை (செவ்வாய்க் கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் திருப்பலியை நிறைவேற்றி தனிப்பங்காக தரம் உயர்த்துகிறார். அதைத்தொடர்ந்து அன்பு விருந்து நடைபெறுகிறது.

மேலும் ஆயர், இந்த பங்கின் முதல் பங்குத்தந்தையாக ஜார்ஜ்ஜை நியமிக்கிறார். முன்னதாக ஆயருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பெனிட்டோ, இணை பங்குத்தந்தை ஜெயசீலன், பங்குபேரவை துணைத்தலைவர் ஹெர்மஸ் கிரகோரி, செயலாளர் ஸ்டெல்லா ராணி, துணை செயலாளர் பீட்டர் ஜெரோம், பொருளாளர் அலன் ஜாய் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.

Similar News