ஆன்மிகம்
திரித்துவ ஆலயத்தில் புனித அந்தோணியாரின் அழியாத உடல் உறுப்புகளுக்கு சிறப்பு வழிபாடு
கோவை திரித்துவ ஆலயத்தில் புனித அந்தோணியாரின் அழியாத உடல் உறுப்புகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் புனிதராக போற்றப்படும் அந்தோணியாரின் ஆலயங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. 786 ஆண்டுகளுக்கு முன் மறைந்த புனித அந்தோணியாரின் அழியாத உடல் உறுப்புகள் (எலும்பு, சதை) திருப்பண்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த உறுப்புகள் புனித அந்தோணியாரின் சொரூபத்தின் நெஞ்சுப்பகுதியில் கண்ணாடிப்பேழை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சொரூபத்துடன் கூடிய திருப்பண்டம் இத்தாலி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது கோவை ராமநாதபுரத்தில் உள்ள தூய திரித்துவ ஆலயத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது.
ஆலயத்தின் பங்கு குரு ஜான்சன் வீபாட்டுப்பரம்பில் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மறைமாவட்ட ஆயர் பால் ஆலப்பாட் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆலய வளாகத்தில் புனித அந்தோணியாரின் சொரூபம் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியே சென்று தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து ஆலய நிர்வாகிகள் கூறியதாவது:-
கோடி அற்புதங்கள் செய்ததால் கோடி அற்புதர் என்று அழைக்கப்படும் புனித அந்தோணியார் 1231-ம் ஆண்டு ஜூன் 13-ந் தேதி மறைந்தார். 32 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கல்லறையை திறந்து பார்த்தபோது, உயிர் துடிப்புள்ள அவரது நாவும், சிதையாத எலும்புகளும், அழுகாமல் உறுதியுடன் காணப்பட்டது. இந்த புனித திருப்பண்டங்கள் இத்தாலியில் உள்ள பதுவை நகரின் பிரான்சிஸ்கன் குருவானவர்களின் பராமரிப்பின் கீழ் உள்ள திருத்தல ஆலயத்தில் பாதுகாப்பாக வைத்து இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.
பிரான்சிஸ்கன் குருவானவர்களின் முயற்சியால் இந்த திருப்பண்டம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, தற்போது கோவைக்கு எடுத்து வரப்பட்டு உள்ளது. இது புனித அந்தோணியாரின் பக்தர்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு காண கிடைத்த அரிய வாய்ப்பாகும். திருப்பண்டம் வந்த இடத்தில் அற்புதங்கள் நடக்கும். இதனால் அனைவருக்கும் இறை ஆசீர்வாதம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு புனித அந்தோணியாரின் திருப்பண்டம் கோவையை அடுத்த எட்டிமடையில் உள்ள அசிசி சினேகாலயா மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு எலியாஸ் தலைமையில் வரவேற்பு அளித்தனர். 3.30 மணிக்கு கப்புச்சின் சபை பெர்னாட்ஷா தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் 4.30 மணி முதல் 7 மணி வரை வழிபாடு நடைபெற்றது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் புனித அந்தோணியாரின் திருப்பண்டம் கேரளாவுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த உறுப்புகள் புனித அந்தோணியாரின் சொரூபத்தின் நெஞ்சுப்பகுதியில் கண்ணாடிப்பேழை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சொரூபத்துடன் கூடிய திருப்பண்டம் இத்தாலி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது கோவை ராமநாதபுரத்தில் உள்ள தூய திரித்துவ ஆலயத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது.
ஆலயத்தின் பங்கு குரு ஜான்சன் வீபாட்டுப்பரம்பில் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மறைமாவட்ட ஆயர் பால் ஆலப்பாட் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆலய வளாகத்தில் புனித அந்தோணியாரின் சொரூபம் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியே சென்று தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து ஆலய நிர்வாகிகள் கூறியதாவது:-
கோடி அற்புதங்கள் செய்ததால் கோடி அற்புதர் என்று அழைக்கப்படும் புனித அந்தோணியார் 1231-ம் ஆண்டு ஜூன் 13-ந் தேதி மறைந்தார். 32 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கல்லறையை திறந்து பார்த்தபோது, உயிர் துடிப்புள்ள அவரது நாவும், சிதையாத எலும்புகளும், அழுகாமல் உறுதியுடன் காணப்பட்டது. இந்த புனித திருப்பண்டங்கள் இத்தாலியில் உள்ள பதுவை நகரின் பிரான்சிஸ்கன் குருவானவர்களின் பராமரிப்பின் கீழ் உள்ள திருத்தல ஆலயத்தில் பாதுகாப்பாக வைத்து இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.
பிரான்சிஸ்கன் குருவானவர்களின் முயற்சியால் இந்த திருப்பண்டம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, தற்போது கோவைக்கு எடுத்து வரப்பட்டு உள்ளது. இது புனித அந்தோணியாரின் பக்தர்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு காண கிடைத்த அரிய வாய்ப்பாகும். திருப்பண்டம் வந்த இடத்தில் அற்புதங்கள் நடக்கும். இதனால் அனைவருக்கும் இறை ஆசீர்வாதம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு புனித அந்தோணியாரின் திருப்பண்டம் கோவையை அடுத்த எட்டிமடையில் உள்ள அசிசி சினேகாலயா மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு எலியாஸ் தலைமையில் வரவேற்பு அளித்தனர். 3.30 மணிக்கு கப்புச்சின் சபை பெர்னாட்ஷா தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் 4.30 மணி முதல் 7 மணி வரை வழிபாடு நடைபெற்றது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் புனித அந்தோணியாரின் திருப்பண்டம் கேரளாவுக்கு எடுத்து செல்லப்பட்டது.