ஆன்மிகம்
வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தவக்கால வழிபாடு
வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி திருத்தலத்தை சுற்றி வந்தனர்.
மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. தென்னகத்து வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் 41 நாட்கள் தவக்கால வழிபாடாக அனுசரிக்கின்றனர்.
இந்த நாட்களில் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனிதவெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது.
அவர் 3-வது நாள் உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படும். இந்த நிகழ்ச்சிகள் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தவக்கால வழிபாடாக தொடங்கியது. அதில் சிலுவைப்பாதை வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி திருத்தலத்தை சுற்றி வந்தனர். மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறுகிறது. முன்னதாக சாம்பல் புதன் வழிபாடு சிறப்பு திருப்பலியும் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை ஆரோக்கிய அன்னை ஆலய பாதிரியார், திருத்தல அதிபர் மற்றும் இருபால் துறவியர்கள் செய்து வருகின்றனர்.
இந்த நாட்களில் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனிதவெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது.
அவர் 3-வது நாள் உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படும். இந்த நிகழ்ச்சிகள் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தவக்கால வழிபாடாக தொடங்கியது. அதில் சிலுவைப்பாதை வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி திருத்தலத்தை சுற்றி வந்தனர். மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறுகிறது. முன்னதாக சாம்பல் புதன் வழிபாடு சிறப்பு திருப்பலியும் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை ஆரோக்கிய அன்னை ஆலய பாதிரியார், திருத்தல அதிபர் மற்றும் இருபால் துறவியர்கள் செய்து வருகின்றனர்.