ஆன்மிகம்
காட்கோபர் காமராஜ் நகர் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி நடந்த போது எடுத்தபடம்.

காட்கோபர் காமராஜ் நகரில் புனித அந்தோணியார் ஆலய வெள்ளி விழா

Published On 2017-01-28 08:28 IST   |   Update On 2017-01-28 08:28:00 IST
மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வெள்ளி விழா கடந்த 22-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழா நடந்தது.
மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வெள்ளி விழா கடந்த 17-ந் தேதி முதல் தொடங்கி நடந்தது. 22-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழா நடந்தது.

நேற்றுமுன்தினம் காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இந்த திருப்பலியை பங்கு தந்தைகள் ஜெயக்குமார், ஆஸ்லின் பொன்செகா, டெரன்ஸ் முர்ராய், இயேசுராஜ் ஆகியோர் நிறைவேற்றினர். பின்னர் மதியம் சமபந்தி விருந்து நடந்தது. இரவு புனித அந்தோணியாரின் தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

Similar News