ஆன்மிகம்
புதுமை அந்தோணியார் ஆலய தேர்பவனி
புதுச்சேரி புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுவை உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் உள்ள புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதுமுதல் நாள்தோறும் நற்செய்தியும் மறையுரையும் வழங்கப்பட்டன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி பங்குத்தந்தை குழந்தைசாமி அடிகள் தலைமையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, சிவா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி பங்குத்தந்தை குழந்தைசாமி அடிகள் தலைமையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, சிவா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.