ஆன்மிகம்

தின்னகுளம் புனித சவேரியார் ஆலய விழாவில் ஆடம்பர சப்பர பவனி

Published On 2016-06-01 12:55 IST   |   Update On 2016-06-01 12:56:00 IST
தின்னகுளம் புனித சவேரியார் ஆலய விழாவில் ஆடம்பர சப்பர பவனி

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் தின்னகுளம் கிராமத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் வருடம் தோறும் நடைபெறும் ஆண்டு விழா கடந்த 21–ந்தேதி மாதா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

21–ந்தேதி இரவு முதல் 27–ந்தேதி இரவு வரை நவநாள் திருப்பலி நடைபெற்றது. 28–ந்தேதி இரவு 10.30 மணியளவில் ஆடம்பர சப்பர பவனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

29–ந்தேதி விரகாலூர் பங்கு தந்தை தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டு மாதா கொடியிறக்கம் நடை பெற்றது. விழாவில் ஆலம்பாடி மேட்டூர், தங்கசாலை, விரகாலூர், ஆலம்பாக்கம், நத்தமாங்குடி, மேலரசூர் உள்பட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கிராம இளைஞர்கள் சார்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

Similar News