ஆன்மிகம்

தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2016-05-12 08:58 IST   |   Update On 2016-05-12 08:58:00 IST
தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான நாளை மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, கலை நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற 15-ந் தேதி காலை 8 மணிக்கு திருப்பலி, பிற்பகல் 3 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு மறைக்கல்வி மன்ற கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாலையில் ஜெபமாலை, திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

21-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து வழங்குதல் போன்றவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, வாணவேடிக்கை போன்றவை நடைபெறுகிறது. திருவிழாவின் இறுதி நாளான 22-ந் தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி, பிற்பகல் 3 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு கொடியிறக்குதல் தொடர்ந்து நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் தலைமையில் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

Similar News