ஆன்மிகம்

புனித இஞ்ஞாசியர் ஆலய பெருவிழா தேர்பவனி: திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்

Published On 2016-04-25 09:31 IST   |   Update On 2016-04-25 09:31:00 IST
புனித இஞ்ஞாசியர் ஆலய பெருவிழா தேர்பவனி: திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே குலமாணிக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் புனித இஞ்ஞாசியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பங்கு தந்தை சாம்சன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 21-ந் தேதி மாலை 6 மணிக்கு தவநாள் திருப்பலி நடைபெற்றது. 22-ந்தேதி திருப்பலியும், தேர்பவனியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பங்கு தந்தையர்கள் கூட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணியளவில் மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித இஞ்ஞாசியர் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. தேரில் புனித இஞ்ஞாசியர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் திரளான கிறிஸ்தவர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் புனித இஞ்ஞாசியர் அருளை பெற்றனர். நிகழ்ச்சியில் வாணவேடிக்கை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமானூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று காலை 8 மணியளவில் விழா நன்றி திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் கொடியிறக்கம் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News