ஆன்மிகம்

மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலய திருவிழா

Published On 2016-04-23 09:56 IST   |   Update On 2016-04-23 09:55:00 IST
மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடைக்கானல் பெருமாள்மலை பங்குத் தந்தை லூயிஸ் கொடியேற்றி விழாவை தொடக்கி வைத்து சிறப்பு திருப்பலி நடத்தினார்.

அடுத்த (மே) மாதம் 1-ந்தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு பகுதிகளின் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு பல தலைப்புகளில் சிறப்பு திருப்பலி நடத்துகிறார்கள்.

முக்கிய நிகழ்வாக வருகிற 30-ந்தேதி மாலை திருப்பலி முடிந்ததும் புனித வளனார் உருவம் தாங்கிய தேர்பவனி நடக்கிறது. மறுநாள் 1-ந்தேதி காலை திருவிழா திருப்பலியும், குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கும் விழாவும், மாலையில் திவ்ய நற்கருணை பவனியும் நடைபெறுகின்றன. அதனைதொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Similar News