கிரிக்கெட்
null

விராட் கோலிக்கு வெள்ளி பேட்டை பரிசளித்த இலங்கை நெட் பவுலர்- வைரலாகும் வீடியோ

Published On 2023-09-11 08:48 GMT   |   Update On 2023-09-11 08:48 GMT
  • நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன்.
  • இந்த பேட்டில் இதுவரை அவர் அடித்த ஒவ்வொரு சதமும் அடங்கியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்று போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மழையாள் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மிதமுள்ள ஆட்டம் இன்று 3 மணிக்கு நடைபெறும்.

இந்த போட்டிக்கு முன்னர் வளர்ந்து வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் தனது அனுபவத்தை விராட் கோலி பகிர்ந்துள்ளார். இதில் கிருஷாந்த் என்ற வீரர் விராட் கோலிக்கு வெள்ளி பேட்டை பரிசாக வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து இலங்கை நெட் பவுலர் கூறியதாவது:-

நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர். அவரை கடைசியாக 2017 -ல் நெட் பயிற்சியின் போது சந்தித்தேன். இந்த வெள்ளி பேட் அவருக்கு எனது சிறிய பரிசு. இந்த பேட்டில் இதுவரை அவர் அடித்த ஒவ்வொரு சதமும் அடங்கியுள்ளது. இந்த பேட்டை தயார் செய்ய எனக்கு மூன்று மாதங்கள் எடுத்தது.



Tags:    

Similar News