கிரிக்கெட்

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் ஓய்வு

Published On 2023-01-30 10:09 GMT   |   Update On 2023-01-30 10:09 GMT
  • பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ரசிகர்களுக்கு முரளி விஜய் நன்றி தெரிவித்தார்.
  • கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.

கிரிக்கெட் விளையாட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுபவர் இந்திய வீரர் முரளி விஜய். இவர் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 38 வயதான முரளி விஜய், கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.

அதன்பின்னர் ரஞ்சிக்கோப்பையில் கவனம் செலுத்திய அவர் 2019-ம் ஆண்டு முதல் அதற்கும் முடிவு கட்டினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்தார். மேலும் பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News