கிரிக்கெட்

கடைசி ஓவரை வீசும் போது எனது இதயம் நிமிடத்துக்கு 200 முறை துடித்தது- வருண் சக்கரவர்த்தி

Published On 2023-05-05 05:54 GMT   |   Update On 2023-05-05 05:54 GMT
  • வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
  • எனது முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மார்க்ரம் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார்.

ஐதராபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ரைட்ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.

கொல்கத்தா நிர்ணயித்த 172 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்னே எடுத்தது.

அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

அவர் 4 ஓவர் வீசி 20 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அவர் கொல்கத்தா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

எனது இதய துடிப்பு நிமிடத்துக்கு 200-யை தொட்டு விட்டது. ஆனால் நீண்ட தூர பகுதியை மனதில் வைத்து நான் அவர்களுக்கு சவால் அளிக்க விரும்பினேன். அதுதான் எனது திட்டமாக இருந்தது. அது மட்டுமே என் மனதில் இருந்தது. எனது முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மார்க்ரம் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார்.

அதே வேளையில் உங்கள் செயல்பாட்டில் நீங்கள் இருப்பது முக்கியம் உணர்ச்சிகள் எழுந்தவுடன் நமது செயல்முறை மறந்து விடலாம்.

கடந்த ஆண்டு நான் 85 கி.மீ. வேகத்தில் பந்து வீசினேன். எனவே நான் பல விஷயங்களை முயற்சித்து கொண்டிருந்தேன். அது உண்மையில் உதவுகிறது என்றார்.

Tags:    

Similar News