கிரிக்கெட்

கொடுத்த தொகைக்கு சரியான ஆளுதான்- கேமரூன் கிரீனை பாராட்டிய இர்பான் பதான்

Published On 2023-05-23 06:28 GMT   |   Update On 2023-05-23 06:28 GMT
  • மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது.
  • அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் கிரீன் 3-ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும்.

ஐபிஎல் 16-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.

கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்சை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம், கேமரூன் க்ரீனின் அதிரடி சதம். அவர் 47 பந்தில் 100 ரன்களை குவித்தார்.

கேமரூன் கிரீன், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக் ஆகிய வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டனர். இவர்களில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கேவிற்கு சொல்லும்படியான பங்களிப்பை செய்யவில்லை. சாம் கரன் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பஞ்சாப் அணிக்கு பங்களிப்பு செய்திருந்தாலும் ஒரு அணியாக அந்த அணி சிறப்பாக செயல்படாததால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.

ஆனால் கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில் சில இன்னிங்ஸ்களை ஆடினார். பவுலிங்கும் நன்றாக வீசினார். அதிலும் வாழ்வா சாவா என்ற கடைசி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கொடுத்த தொகைக்கு கிரீன் சரியான ஆளுதான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது. பவர் ஹிட்டரான கிரீன் ஏமாற்றமளிக்கவில்லை. மும்பை இந்தியன்சின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் கிரீன் 3-ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும். சூர்யகுமார் யாதவ் 4-ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம்.

என்று இர்பான் பதான் கூறினார்.

Tags:    

Similar News