கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து திணறல்

Published On 2024-03-10 07:07 GMT   |   Update On 2024-03-10 07:07 GMT
  • ஆஸ்திரேலியாவுக்கு 279 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
  • நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பென் சியர்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 162 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 256 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

94 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து இருந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 108.2 ஓவர்களில் 372 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 279 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரச்சின் ரவீந்தரா 82 ரன்னும், டாம்லாதப் 73 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

279 ரன் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 34 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. இதனால் 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Tags:    

Similar News