கிரிக்கெட்

தொடர்ந்து 3 முறை.. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நியமனம்

Published On 2024-01-31 10:48 GMT   |   Update On 2024-01-31 10:48 GMT
  • இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
  • ஏசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஜனவரி 2021-ல் ஏற்றுக்கொண்டார்.

பாலி

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏசிசி தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அதில் தற்போது ஜெய் ஷா 2-வது ஆண்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவர் வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசனுக்குப் பிறகு ஜனவரி 2021-ல் ஏசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஏற்றுக்கொண்டார். 2022-ல் ஷாவின் தலைமையின் கீழ், ஏசிசி ஆசிய கோப்பை டி20 போட்டியாகவும், 2023-ல் ஒருநாள் போட்டியாகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News