கிரிக்கெட்

ஆறாவது ஐ.பி.எல். கோப்பையுடன் ஓய்வு... அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார் அம்பதி ராயுடு

Published On 2023-05-30 13:34 GMT   |   Update On 2023-05-30 13:34 GMT
  • அம்பதி ராயுடுவை அணி சார்பில் கோப்பையை வாங்க வைத்து கேப்டன் டோனி கவுரவித்தார்.
  • நாட்டுக்காக விளையாடியதை மிகப்பெரிய கவுரவமாக கருதுவதாக ராயுடு கூறி உள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த இறுதி ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு கூறியிருந்தார். அதன்படி இன்று ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அனைத்து வகை இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

நேற்று சென்னை அணி வெற்றி பெற்றதும் பரிசளிப்பு விழாவில் அம்பதி ராயுடுவை அணி சார்பில் கோப்பையை வாங்க வைத்து கேப்டன் டோனி கவுரவித்தார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அவர் இடம்பெற்ற அணி 6 முறை இறுதிப்போட்டியில் வென்றுள்ளது. 6 முறை ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்திய அம்பதி ராயுடு இன்றுடன் ஓய்வு பெற்றிருக்கிறார்.

"15 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இருந்து சீனியர் அணி வரை நாட்டுக்காக விளையாடியதை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். ஆறு முறை ஐபிஎல் வெற்றியாளராக எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததில் பெருமை கொள்கிறேன்" என அம்பதி ராயுடு கூறி உள்ளார்.

Tags:    

Similar News