சினிமா
ராகுல் பரமகம்சா இயக்கத்தில் ஆரியன், உபாசனா நடிப்பில் உருவாகி வரும் கருத்துக்களை பதிவு செய் படத்தின் முன்னோட்டம்.
சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் "கருத்துக்களை பதிவு செய்". இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார். ஆர்.பி.எம் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜித்தன் 2 என்ற திகில் படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இப்படத்தை இயக்குகிறார்.
இன்றைய இணையதளம், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளம் மூலம் ஏற்படும் காதல்கள் அனைத்தும் ஒரு அபாய வலை. அதில் பெண்கள் கண்மூடி தனமாக சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாய வலையை பற்றி பேசும் திரைப்படம் தான் கருத்துகளை பதிவு செய். அந்த மாயவலையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், எப்படி அந்த நயவஞ்சகம் செய்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பித்து வெளியில் வருகிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை.