சினிமா
பெருநாளி

பெருநாளி

Published On 2019-09-11 08:54 GMT   |   Update On 2019-09-11 08:54 GMT
'சிட்டிசன்’ மணி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜெயம், மதுனிக்கா நடிப்பில் உருவாகி வரும் ‘பெருநாளி’ படத்தின் முன்னோட்டம்.
அஜித்தின் ‘சிட்டிசன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மணி, அப்படத்தை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததோடு, வடிவேலுவின் காம்பினேஷனில் பல காமெடிக் காட்சிகளில் தனது காமெடி திறமையை மூலம் காமெடி நடிகர் ‘சிட்டிசன்’ மணியாக பிரபலமானவர், தற்போது ‘பெருநாளி’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். 

ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஜெயம் என்ற புதுமுகம் நடிக்க, ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிரேன் மனோகர், சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 



குடும்ப சென்டிமெண்டுடன், காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து சொல்லும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாமா - மருமகள் சென்டிமெண்டை இதுவரை சொல்லப்படாத வகையில் சொல்லியிருக்கிறார்களாம்.
Tags:    

Similar News