சினிமா
தீரஜ், பிரதாயினி, துஷாரா, ராதாரவி, சார்லி, அஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ’போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் முன்னோட்டம்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள ’போதை ஏறி புத்தி மாறி’ படத்தை சந்துரு கே.ஆர் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தீரஜ், பிரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராதாரவி, சார்லி, அஜய் ஆகியோர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை கவனிக்க, கே.பி. இசையமைத்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் நடராசன் திரைக்கதை எழுதியுள்ளார்.
’போதை ஏறி புத்தி மாறி' திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட, சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படம். ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.