சினிமா

கேக்கிறான் மேய்க்கிறான்

Published On 2017-03-04 04:24 GMT   |   Update On 2017-03-04 04:24 GMT
அஸ்வின் கிரியே‌ஷன்ஸ் சார்பில் லயன் பிரின்ஸ் தயாரிக்க எஸ்.சாம் இமானுவேல் இயக்கும் ‘கேக் கிறான் மேய்க் கிறான்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
அஸ்வின் கிரியே‌ஷன்ஸ் சார்பில் லயன் பிரின்ஸ் தயாரிக்க எஸ். சாம் இமானுவேல் இயக்கும் படம் ‘கேக் கிறான் மேய்க்  கிறான்’.

இதில் சபா கதாநாயகனாகவும், லூப்னா அமீர் கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், சபீதா  ஆனந்த், பிளாக் பாண்டி, மதுமிதா உள்பட நடிக்கின்றனர். ‘மஸ்காரா’ புகழ் அஸ்மிதா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.



ஒளிப்பதிவு-கார்த்திக் பாலா, இசை-ஆதித்ய மகாதேவன், பாடல்கள்-முருகன் மந்திரம், நிகரன், எடிட்டிங்-சபரி பெரியசாமி, நடனம்-  சரண் பாஸ்கர், சதீஷ், ஸ்டண்ட்-ஸ்பீடு மோகன், தயாரிப்பு - லயன் பிரின்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.சாம்  இமானு வேல்.

இணைபிரியாத நண்பர்கள் 4 பேர் மாடலிங் கம்பெனி நடத்தி வருகிறார்கள். இதற்காக கதாநாயகி வீட்டில் நடக்கும் திருட்டு  தொடர்பாக நாயகனை அவள் சந்தேதிக்கிறாள். பிரிவினை ஏற்படுகிறது. பின்னர் இருவரும் எப்படி சேர்ந்தார்கள் என்பது கதை.



முத்தக்காட்சியில் நடிக்க நாயகன் தயங்கி மறுத்துவிட்டார். படத்துக்கு அவசியம் என்று இயக்குனர் எடுத்து கூறினார். அப்போது  எதிர்பாராதவிதமாக கதாநாயகி திடீர் என்று கதாநாயகனுக்கு முத்தம் கொடுத்தார். காட்சி ஓ.கே. ஆனது. ‘ கேக்கிறான்  மேய்க்கிறான்’ படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்த இயக்குனரை, தயாரிப்பாளர் பாராட்டினார்.

Similar News