சினிமா
தெலுங்கில் `பாகு பங்கா ராம்' என்ற பெயரில் தயாராகும் படமே தமிழில் `செல்வி'யாக உருவாகிறது.ஆகஸ்ட் 12-ம் தேதி இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் வெளியாகிறது.
சித்தாரா எண்டர் டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் "செல்வி''. தெலுங்கில் `பாகு பங்கா ராம்' என்ற பெயரில் தயாராகும் படமே தமிழில் `செல்வி'யாக உருவாகிறது.
ஆகஸ்ட் 12-ம் தேதி இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் வெளியாகிறது. போலீஸ உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.இவர்களுடன் ஜெய பிரகாஷ், சம்பத், சவுகார்ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ரிச்சர்ட் பிரசாத், இசை-ஜிப்ரான், எடிட்டிங்- திரிநாத், பாடல்கள்-கருணாநிதி, கல்யாண்ஜி, அருண்பாரதி, மீனாட்சிசுந்தரம், மோகன், இயக்கம்-மாருதி. இவர் 20-க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர்.
தயாரிப்பு -பத்ரகாளி பிரசாத், வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர்- ஏ.ஆர்.கே.ராஜராஜா. படம் பற்றி கூறிய அவர்.... "வெங்கடேஷ் - நயன்தாரா ஏற்கனவே லஷ்மி என்ற படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆக்ஷன், காமெடி, குடும்ப கதையாக செல்வி உருவாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடை பெறுகிறது. நாயகன் வெங்கடேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்'' என்றார்.
ஆகஸ்ட் 12-ம் தேதி இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் வெளியாகிறது. போலீஸ உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.இவர்களுடன் ஜெய பிரகாஷ், சம்பத், சவுகார்ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ரிச்சர்ட் பிரசாத், இசை-ஜிப்ரான், எடிட்டிங்- திரிநாத், பாடல்கள்-கருணாநிதி, கல்யாண்ஜி, அருண்பாரதி, மீனாட்சிசுந்தரம், மோகன், இயக்கம்-மாருதி. இவர் 20-க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர்.
தயாரிப்பு -பத்ரகாளி பிரசாத், வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர்- ஏ.ஆர்.கே.ராஜராஜா. படம் பற்றி கூறிய அவர்.... "வெங்கடேஷ் - நயன்தாரா ஏற்கனவே லஷ்மி என்ற படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆக்ஷன், காமெடி, குடும்ப கதையாக செல்வி உருவாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடை பெறுகிறது. நாயகன் வெங்கடேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்'' என்றார்.