சினிமா
சர்ச்சைகளில் சிக்க விரும்பும் நடிகர்
பிரபல நடிகர் ஒருவர், சர்ச்சைகளால் தான் நான் வளர்கிறேன், சிறிய விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி விடுகின்றனர் என்று சொல்கிறாராம்.
சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கி வருகிறார் இரண்டு பெயர் கொண்ட நடிகர். ஆனபோதும், அதுகுறித்து அந்த நடிகர் பெரிதாக வருத்தப்படுவதில்லையாம்.
இதுபற்றி அவரிடம் கேட்டால், சர்ச்சைகளால் தான் நான் வளர்கிறேன், என் மீது அனைவரது கவனமும் இருப்பதால், சிறிய விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி விடுகின்றனர் என்று கேஷுவலாக சொல்கிறாராம்.
அதோடு, இது பத்தாது, இன்னும் நிறைய சர்ச்சைகளை எதிர்பார்க்கிறேன் என்று தில்லாக சொல்லி நல்லெண்ண அடிப்படையில் அட்வைஸ் கொடுத்தவர்களை வாயடைக்க வைத்து விடுகிறாராம்.