சினிமா
புதுமுக நடிகருடன் நடிக்க அதிக பணம் கேட்ட நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் கேட்டிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் தொடந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நடிகை, தற்போதும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறாராம். இதற்காக நடிகையிடம் ஒரு கணிசமான தொகை சம்பளமாக பேசப்பட்டதாம்.
புதுமுக நடிகர்தான் இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி என்று சொன்னவுடன் திடீரென சம்பளத்தை அதிகமாக உயர்த்தி விட்டாராம். என்னை நம்பிதான் கதை, நீங்கள் தரவில்லை என்றால் விலகி விடுவேன் என்று நடிகை சொன்னதால் படக்குழுவினர் அதிக சம்பளம் கொடுத்து இருக்கிறார்களாம்.