சினிமா
தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடும் நடிகர்
கோலிவுட்டில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் ஒருவர், தற்போது தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே பிரபலமான நடிகர், அந்த படத்துக்குப் பிறகு, அவருக்கு எந்த படமும் பெரியதாக கைக்கொடுக்கவில்லையாம். இதனால், சொந்தமாக பட தயாரிப்பில் இறங்கினாராம். அந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் நஷ்டம் அடைந்தாராம்.
இந்த படத்திற்காக வாங்கிய கடன், தற்போது பிரச்சனையாகி வருகிறதாம். இதனால் நடிகர் பெயரை மற்ற தயாரிப்பாளர்களிடம் சொன்னால் முகம் சுளிக்கிறார்களாம். அவரை வைத்து படம் எடுதால் வம்பு, வழக்குகள் படத்தை பாதிக்கும் என்று பட அதிபர்கள் பயப்படுகிறார்களாம். இதனால் அந்த நடிகர் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகிறாராம்.