சினிமா
கிசுகிசு

எதிர்பார்த்ததை விட அதிகம்... சந்தோஷத்தில் நடிகர்

Published On 2020-08-15 12:05 GMT   |   Update On 2020-08-15 12:05 GMT
பிரபல நடிகர் ஒருவர், தான் எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைத்திருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
ஒரு காதல் படத்தில் அறிமுகமான மூன்றெழுத்து நாயகனை வைத்து படம் தயாரிக்க, துபாயில் எண்ணெய் கிணறு வைத்திருக்கும் தொழில் அதிபர் வந்தாராம். பட வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் சும்மா இருந்த நடிகருக்கு வாயெல்லாம் பல். தொழில் அதிபரை சிரித்தபடி வரவேற்றாராம். தயாரிப்பாளர் துபாய்க்காரர் என்பதால் ரூ.25 லட்சம் சம்பளம் கேட்கலாம் என்று மனதுக்குள் கணக்கு போட்டாராம், ஹீரோ.


தொழில் அதிபரோ, “ரூ.45 லட்சம் கொடுக்கிறேன். ஒரே கட்டமாக படத்தை முடித்துக் கொடுத்து விடுங்கள்” என்று கூறி, முன்பணமாக ரூ.25 லட்சத்தை எடுத்து கொடுத்தாராம். எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்று நடிகர் சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
Tags:    

Similar News