சினிமா
பெரியவர்கள் பேச்சை கேட்க மாட்டேன்.... அடம் பிடிக்கும் நடிகை
முன்னணி நடிகையாக இருப்பவர் பெரியவர்கள் பேச்சை கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்து வருகிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் சின்ன நம்பர் நடிகைக்கு வயது அதிகமாகி கொண்டே போகிறதாம். காதல் கிசுகிசுக்கப்பட்ட நடிகரும் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டாராம். இதனால், வருத்தத்தில் இருக்கும் நடிகையை பெற்றோர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள் என்று கட்டாயப்படுத்துகிறார்களாம்.
ஆனால், நடிகையோ பெரியவர்கள் பேச்சை கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம். தனக்கு கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும், காதலித்துதான் திருமணம் செய்வேன் என்று கூறுகிறாராம். மனதில் இருப்பவர் யார் என்று கேட்டாலும் சொல்ல மறுக்கிறாராம்.