சினிமா
பலபேர் குறைக்கும் நேரத்தில் சம்பளத்தை உயர்த்திய நடிகர்
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர்கள் பலர் சம்பளத்தை குறைக்கும் நேரத்தில் ஒரு நடிகர் உயர்த்தி இருக்கிறாராம்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர்கள் நடிகைகள் பலரும் தங்களுடைய சம்பளப் பணத்தை குறைத்து வருகிறார்களாம். முன்னணி நடிகர்களும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பலரும் கேட்டு வருகிறார்களாம்.
ஆனால் இந்த நிலையில் பிரபல வாரிசு நடிகர் ஒருவர் தனது சம்பள பணத்தை லட்சத்திலிருந்து கோடியாக உயர்த்தி இருக்கிறாராம். காரணம் கேட்டால் தன்னுடைய முந்தைய படத்தின் வெற்றியை சொல்லுகிறாராம். ஆனால் தயாரிப்பாளர்கள் 10 படத்தில் ஒரு படம் ஓடிவிட்டால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று கேட்டு வருகிறார்களாம்.