சினிமா

அடம்பிடித்த இயக்குநர் - ஏமாற்றிய தயாரிப்பாளர்

Published On 2018-10-16 15:47 GMT   |   Update On 2018-10-16 15:59 GMT
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் தனது அடுத்த படத்திற்கான கதை எழுத வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட நிலையில், இயக்குநரின் ஆசையை தயாரிப்பாளர் நிறைவேற்றவில்லையாம். #Gossip
பிரம்மாண்ட இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, இரண்டு முறை பிரபல நாயகனை வைத்து படம் இயக்கிவிட்ட அந்த இயக்குநர் மீண்டும் அதே நாயகனை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறாராம்.

அந்த இயக்குநர் இயக்கிய கடைசி படம் அரசியல் கருத்துக்களால் சர்ச்சைக்குள்ளாகி வெற்றி பெற்ற நிலையில், சில விமர்சனங்களும் எழுந்ததாம்.

பழைய படங்களில் இருந்து காட்சிகளை சுடுவதில் இயக்குநர் கெட்டிக்காரர் என்று ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தார்களாம். என்னதான் பழைய படங்களின் காட்சிகளை சுட்டாலும், ஹிட் கொடுத்துவிடுகிறாரே என்று ரசிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அவர் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறதாம்.

இந்த நிலையில், இயக்குநர் தனது அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுத வெளிநாடு செல்ல வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டாராம். ஆனால் தயாரிப்பாளரோ, வெளிநாடு வேண்டாம், தனக்கு சொந்தமான கடற்கரை வீட்டில் தங்கி கதை எழுதும்படி கூறிவிட்டாராம். இதனால் இயக்குநருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். #Gossip

Tags:    

Similar News