சினிமா
அதைப்பற்றி மட்டும் கேட்க வேண்டாம் - மழுப்பும் நாயகி
தமிழில் இரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், பிரபலமான அந்த நாயகியிடம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பினாராம்.
தமிழில் இரு படங்களில் மட்டுமே நடித்துள்ள இலிக்கும் நாயகி, தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்தாராம். சமீபத்தில் தெலுங்கு சினிமாவையும் விட்டுவிட்டு, தற்போது இந்தி பட உலகில் வலம் வருகிறாராம்.
அதேநேரத்தில் வெளிநாட்டு புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து நாயகி வருகிறாராம். தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை நாயகி அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவரை கணவர் என்று கூறியிருந்தாராம். இதையடுத்து நாயகிக்கும், அவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக ஒரு பேச்சு உலா வந்ததாம்.
இந்நிலையில், நாயகி நடிப்பில் உருவாகியிருக்கும் ஒரு இந்தி படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாயகியிடம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேட்க, நாயகி அதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டாராம். அதுபற்றி அதிகம் பேச தனக்கு விருப்பமில்லை என்றும், அதனை தவிர்த்து மற்ற விசயங்களை பேசலாம் என்றும் நாயகி மழுப்பி விட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.