சினிமா

லாபத்தில் பங்கு கேட்கும் நடிகை

Published On 2017-08-29 15:38 GMT   |   Update On 2017-08-29 15:38 GMT
நடிகை ஒருவர் படத்தில் நடிப்பதற்கு சம்பளம் கேட்காமல், கிடைக்கும் லாபத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கிறாராம்.
வெள்ளாவியில் வெளுத்த நடிகை நடித்த தெலுங்கு படம் ஒன்று சமீபத்தில் வெளியானதாம். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டாகி இருக்கிறதாம். ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லாத கதைக்கு பட்ஜெட் குறைவாக இருக்கும் என்பதால் மேற்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு சிரமம் தர விரும்பாமல், சம்பளம் பெறாமலே நடித்துள்ளாராம் நடிகை. அதற்கு பதிலாக வரும் லாபத்தில் பங்கு தந்தால் போதும் என ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

நடிகையின் துணிச்சலுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாம். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளதாம். நடிகையின் இந்த செயலால், பல நடிகைகளும் இதுபோன்ற பின்பற்ற முடிவு செய்திருக்கிறார்களாம்.
Tags:    

Similar News