சினிமா
நடிகையால் கண்ணீர் விட்ட தயாரிப்பாளர்
படம் வெளிவருவதற்கு காரணமாக இருக்கும் நடிகையை நினைத்து படவிழாவில் கண் கலங்கிய தயாரிப்பாளர்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தற்போது பிரபலமாகி இருக்கும் ஓவியமான நடிகை, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் நடித்திருந்தாராம். ஆனால், அந்த படம் வெளியாகமல் முடங்கி இருந்ததாம். இதனால், தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டமாம். தற்போது நடிகை மிகவும் பிரபலமடைந்திருப்பதால், அந்தப் படத்தை வாங்கி வெளியிட பலர் முன் வந்திருக்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கிறார். ஓவியமான நடிகை மூலமாகத்தான் இந்தப் படம் புத்துயிர் பெற்று வெளியாகிறது என்று பட விழாவில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் தயாரிப்பாளர்.