சினிமா

8 வருடங்களுக்கு பிறகு நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு

Published On 2017-08-03 11:11 GMT   |   Update On 2017-08-03 11:11 GMT
முன்னணி நடிகையாக வலம் வராவிட்டாலும், தனக்கென தனிப்பெயரை சம்பாதித்த நடிகை ஒருவருக்கு 8 வருடங்களுக்கு பிறகு புதிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது.
தமிழில் முன்னணி நாயகராக வலம் வரும் முகவரி நாயகனின் கொழுந்தியாளான அந்த நடிகை, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்திற்காக தேசிய விருதையும் வென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் வாங்கிய அந்த நடிகை பின்னர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். நாயகியாக அறிமுகமான முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தாலும், தொடர்ந்து படங்களில் நடிக்காமல் விலகி இருந்த அந்த நடிகை அதன்பிறகு சில மலையாள படங்களில் நடித்தார்.

பின்னர் தமிழில் சத்ரிய நடிகருடன் ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதையடுத்து, மீண்டும் தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு தற்போது நாயகிக்கு கிடைத்து இருக்கிறது.  

இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நாயகி ஆகி இருக்கிறார். இனி தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தவும் நடிகை முடிவு செய்திருக்கிறாராம்.
Tags:    

Similar News