சினிமா

சொன்னபடி செய்யவில்லை: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்

Published On 2017-07-29 12:58 GMT   |   Update On 2017-07-29 12:58 GMT
தான் சொன்னதை சரியான நேரத்தில் செய்யவில்லை என்று இயக்குநர் ஒருவர், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ரவுடி படத்தை இயக்கிய இயக்குநர் தற்போது சிங்க நடிகரை வைத்து கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்தது.

அதனைத் தொடர்ந்து அந்த படத்தில் இருந்து பாடல் ஒன்றும் வெளியானது. அடுத்ததாக அந்த பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிடப்படும் என்று இயக்குநர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாடல் வரிகள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்து நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாடலை வெளியிட முடியவில்லை என்று டுவிட் மூலம் சிங்க நாயகனின் ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

மேலும் அடுத்த நாள் கண்டிப்பாக வெளியாகும் என்றும் உறுதியளித்திருக்கிறார். இதனால் சிங்க நடிகரின் ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் இருந்தாலும், நாளை பாடல் வெளியாகும் என்று இயக்குநர் கூறியிருப்பதால் உற்சாகம் குறையாமல் இருக்கின்றனர்.

முன்னதாக ஒருமுறை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறி, சரியான நேரத்தில் போஸ்டரை வெளியிடாமல், ரசிகர்களிடையே விமர்சனத்திற்குள்ளாகி பின்னர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
Tags:    

Similar News