சினிமா

டுவிட்டரில் இழிவான கருத்து தெரிவித்த நபரை ஓடவிட்ட பிரபல நடிகை

Published On 2017-05-10 10:39 GMT   |   Update On 2017-05-10 10:39 GMT
டுவிட்டரில் இழிவான கருத்து தெரிவித்த நபரை பிரபல நடிகை ஒருவர் ஓடவிட்டிருக்கிறார்.
மலையாளத்தில் செல்பீ படத்தின் மூலம் அறிமுகமாகிய அந்த நடிகை, தமிழில் விரல் நடிகருடன் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார்.

மூக்கு நீளமான வாரிசு நடிகருடன் அந்த நடிகை நடித்துள்ள புதிய படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், அரசியல் வாரிசு நடிகருடனும் நடித்து வருகிறார்.



இவ்வாறு பிசியான நேரத்திலும் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் அந்த நடிகை உலா வரும் போது, நெட்டிசன்களில் ஒருவர் தெரிவித்த இழிவான கருத்துக்கு நடிகை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அந்த நெட்டிசன், மக்கள் தியேட்டருக்கு செல்வதே நடிகைகளை பார்ப்பதற்கும், நடிகையின் கவர்ச்சியை ரசிப்பதற்கும் தான் என்று கூறியிருக்கிறார்.

இந்த கருத்தை பார்த்து கொந்தளித்த அந்த நடிகை, அந்த நெட்டிசனிடம், மக்கள் தியேட்டருக்கு சென்று நல்ல படங்களையே பார்க்க விரும்புகின்றனர். மாறாக நடிகைகளின் கவர்ச்சியை ரசிப்பதற்காக செல்லவில்லை என்று கூறியிருக்கிறார். அவ்வாறு நீங்கள் நினைத்தால் உங்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். நடிகையின் இத்தகைய கருத்தை பார்த்த அந்த நெட்டிசன் தனது கருத்தை அழித்து விட்டு ஓடிவிட்டார்.
Tags:    

Similar News