சினிமா
கழற்றிவிடப்பட்ட காதலனால் பயப்படும் நடிகை
நடிகை ஒருவர் தன்னால் கழற்றிவிடப்பட்ட காதலனால் பயத்தில் இருக்கிறாராம். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான பட்டணத்து நடிகை இந்தியில் நடிக்கும்போது தன்னுடன் நடித்தவருடன் காதல் வயப்பட்டார். தனது காதலனின் பெயரையும் அந்த நடிகை தனது கையில் பச்சைக் குத்திக் கொண்டார். இந்த விவரம் பாலிவுட்டில் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், இவர்களுடைய காதல் வாழ்க்கை கொஞ்ச நாட்களிலேயே கசந்து போயுள்ளது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. காதல் தோல்வியால் அந்த நடிகையை காதலித்தவர் போதைக்கு அடிமையாகிவிட்டாராம். அவரால் அந்த போதையிலிருந்து வெளியேறவே முடியவில்லையாம்.
தன்னுடைய காதல் கதையை அந்த நடிகர் புத்தகமாக எழுதி வெளியிடவிருக்கிறாராம். இதனால், பட்டணத்து நடிகைக்கு தற்போது பீதி கிளம்பியுள்ளதாம். புத்தகமாக வெளியிட்டால் தன்னுடைய இமேஜ் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம்.
ஆனால், இவர்களுடைய காதல் வாழ்க்கை கொஞ்ச நாட்களிலேயே கசந்து போயுள்ளது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. காதல் தோல்வியால் அந்த நடிகையை காதலித்தவர் போதைக்கு அடிமையாகிவிட்டாராம். அவரால் அந்த போதையிலிருந்து வெளியேறவே முடியவில்லையாம்.
தன்னுடைய காதல் கதையை அந்த நடிகர் புத்தகமாக எழுதி வெளியிடவிருக்கிறாராம். இதனால், பட்டணத்து நடிகைக்கு தற்போது பீதி கிளம்பியுள்ளதாம். புத்தகமாக வெளியிட்டால் தன்னுடைய இமேஜ் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம்.