சினிமா

கணவரையும், முன்னணி நடிகர்களையும் பொதுமேடையில் கலாய்த்த நடிகை

Published On 2017-04-24 12:41 GMT   |   Update On 2017-04-24 12:41 GMT
நடிகை ஒருவர் தனது கணவரையும், முன்னணி நடிகர்களையும் பொதுமேடையில் கலாய்த்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
ஜோதிமயமான நடிகை தற்போது தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகிவிட்டார். அவரது குடும்பத்தில் அவருக்கு கொடுத்திருக்கும் சுதந்திரம், மேடைகளிலும் அவரை சுதந்திரமாக பேசவிட்டிருக்கிறது என்றுதான் கோலிவுட் வட்டாரத்தில் பெரிய பேச்சாக இருந்து வருகிறது.

அப்படித்தான் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடிகை சகட்டுமேனிக்கு நடிகர்களையும், இயக்குனர்களையும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். அதாவது, ஒரு பெரிய ஹீரோ படத்துக்கு எதுக்கு மூன்று, நான்கு ஹீரோயின்கள் போடுகிறார்கள். ஒரேயொரு ஹீரோயினை நடிக்கவைத்தால் போதாதா? என்று அவர் பேசிய பேச்சு, அரங்கம் மட்டுமில்லாது திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.



சமீபத்தில்கூட இந்த நடிகை, முண்ணனி நடிகரின் படத்தில் நடிக்க கமிட்டாகி, பின்னர் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அந்த படத்தில் அந்த நடிகருக்கு ஏற்கெனவே இரண்டு ஹீரோயின்கள் இருந்தனர். மூன்றாவதாக இவரும் கமிட்டாகி, அடுத்த சில நாட்களிலேயே அந்த படத்திலிருந்து வெளிவந்தது அனைவருக்கும் பெரிய கேள்வியை எழுப்பியது.

ஒருவேளை நடிகையின் இந்த எண்ணம்தான் அந்த படத்திலிருந்து இவர் விலக காரணமாக இருக்குமோ? என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இருப்பினும், நடிகை தற்போது சொல்லியிருப்பதும் சரிதானே? என்பதுபோலவும் பேசிக்கொண்டு வருகிறார்களாம். இப்படி பேசும் நடிகையின் கணவர்கூட இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் சேர்ந்து படம் பண்ணியிருக்கிறார்? என்பதை அவர் நினைவில் வந்திருக்காது போல.

Similar News