சினிமா

ஐந்தே நாட்களில் வேண்டாம் என்று வந்துவிட்ட பிரபல தொகுப்பாளினி

Published On 2017-04-21 13:28 GMT   |   Update On 2017-04-21 13:28 GMT
பிரபல தொகுப்பாளினி ஒரு விஷயத்தை ஐந்தே நாட்களில் வேண்டாம் என்று ஓடி வந்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
அந்த தொகுப்பாளினி சின்னத்திரையில் பிரபலமாக வலம் வருபவர். சிரித்துக்கொண்ட நட்சத்திரங்களை பேட்டியெடுப்பதில் பேர் போனவர். சமீபத்தில்கூட நடிகர் ஒருவர் இயக்குனராக களமிறங்கிய படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு கடந்த வருடம்தான் திருமணம் நடந்தது. காதலித்து பெற்றோர் சம்மதத்துடன்தான் இவர்களது திருமணம் நடந்தது.

திருமணம் நடக்கும் வரைக்கும் இந்த தொகுப்பாளிக்கு சமைக்கவே தெரியாதாம். திருமணத்திற்கு பிறகு இவர் சமைக்க கற்றுக் கொண்டது நூடுல்ஸ்தானாம். பெரிய ஓட்டல்களில் எல்லாம் ஆண்கள் சமைக்கும்போது, வீட்டில் மட்டும் பெண்கள் சமைக்க வேண்டுமா? என்பதுபோல் பேசும் இந்த நடிகை, இதனாலேயே இதுவரை சமையலை கற்றுக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளாராம்.



திருமணத்திற்கு பிறகும் இது நீடிப்பதாக பேச்சு அடிபடுகிறது. இருப்பினும், இந்த தொகுப்பாளினியும் சமையல் கற்றுக் கொள்ளவேண்டும் என்று சமையல் வகுப்புக்கு சென்றுள்ளார். ஆனால், ஐந்தே நாட்களில் அது வேண்டாம் என்று ஓடியே வந்துவிட்டாராம். அப்படி அங்கு என்ன நடந்தது? என்பதுதான் அனைவருக்கும் புரியாத புதிராக உள்ளதாக வெளிவட்டாரங்களில் பேசப்படுகிறது.

Similar News