சினிமா

இயக்குனரின் பிடிவாதத்தால் அப்செட்டான முன்னணி நடிகர்

Published On 2017-04-06 05:34 GMT   |   Update On 2017-04-06 05:34 GMT
முன்னணி நடிகர் ஒருவர் இயக்குனர் ஒருவரின் பிடிவாதத்தால் ரொம்பவும் அப்செட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
மூன்றெழுத்து இயக்குனர் தளபதி நடிகரை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தளபதி நடிகரை வைத்து இரண்டாவது படம் பண்ணும் அளவுக்கு தன்னுடைய இமேஜ் உயர்ந்துவிட்டதாக நினைத்துவிட்ட அந்த இயக்குனரும், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தினார். இதனால், தயாரிப்பாளர் தரப்பு தளபதியிடம் முறையிட, அப்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார் அந்த நடிகர்.

ஆனால், தற்போது மீண்டும் அந்த மூன்றெழுத்து இயக்குனர் ரொம்பவும் பிடிவாதமாக ஒரு செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அந்த முன்னணி நடிகரை ரொம்பவும் அப்செட்டாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது என்னவென்றால், மூன்றெழுத்து இயக்குனரின் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்குவதற்கு ஒட்டுமொத்த குழுவும் ராஜஸ்தான் போயிருக்கிறதாம்.



சென்னையிலேயே இவ்வளவு வெயில் வாட்டியெடுக்கும்போது, பாலைவனமான ராஜஸ்தானில் குளிரவா செய்யும். அங்கு இதைவிட அதிகமான வெயில் வாட்டியெடுத்திருக்கிறது. இதையெல்லாம் கண்ட படக்குழு கொஞ்சம் பதறிப்போக, இங்கிருந்து வேறு எங்காவது சென்று பாடலை படமாக்கலாம் என்று மூன்றெழுத்து இயக்குனரிடம் யோசனை கூறியுள்ளார்.

ஆனால், இயக்குனரோ, எவ்வளவு வெயில் இருந்தாலும் இங்குதான் பாடல் காட்சியை படமாக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம். இதனால், ஒட்டுமொத்த படக்குழுவும் ரொம்பவும் அப்செட்டாகியுள்ளதாம். இது தளபதி நடிகரையும் ரொம்பவும் அப்செட்டாக்கியுள்ளதாம். 

Similar News