சினிமா

தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்த நடிகை!

Published On 2017-03-01 13:19 GMT   |   Update On 2017-03-01 13:19 GMT
நடிகை ஒருவர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயத்தை கொடுத்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ஆனந்தமான நடிகை அறிமுகமான சுனாமி படம் ஓரளவுக்கு வெற்றியடைந்தாலும், அந்த படம் நடிகைக்கு சினிமாவில் திறமையான நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது. இருந்தாலும் நடிகைக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகவே இருந்தது.

இந்நிலையில்தான், இசைத்துறையில் இருந்து நடிப்பு துறைக்கு அறிமுகமான பிரகாசமான நடிகர் தனது அடுத்தடுத்த படங்களில் நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்திவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதுவரை அவர் படங்களில் நடிக்க சம்பளத்தை தயாரிப்பாளர்கள்தான் தீர்மானித்து வந்தார்களாம்.

அதன்படி, நடிகைக்கு இதுவரை பத்து முதல் பதினைந்து லட்சம்தான் சம்பளமாக கொடுத்தார்களாம். தற்போது வளர்ந்துவிட்ட நடிகை என்பதால், தனது சம்பளத்தை தானே தீர்மானிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். அதாவது, முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் படம் என்றால் தன்னுடைய சம்பளம் ரூ.25 லட்சம் என்றும், அறிமுக இயக்குனர், நடிகர் படம் என்றால் தன்னுடைய சம்பளம் ரூ.30 லட்சம் என்றும் தயாரிப்பாளர்களிடம் சொல்லி விடுகிறாராம்.

ஆனந்தமான நடிகையின் இந்த அறிவிப்பால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். 

Similar News