சினிமா

என் படத்துக்கு முன்கூட்டியே தலைப்பு வைக்கக்கூடாது: முரண்டு பிடிக்கும் நடிகர்

Published On 2017-02-09 10:31 GMT   |   Update On 2017-02-09 10:31 GMT
தன்னுடைய படத்துக்கு முன்கூட்டியே தலைப்பு வைக்கக்கூடாது என்று நடிகர் ஒருவர் முரண்டு பிடிக்கிறாராம். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
முன்பெல்லாம் ஒரு படத்துக்கு தலைப்பு தேர்வு செய்தபிறகுதான் அந்த படத்தின் படப்பிடிப்பையே தொடங்குவது என கோலிவுட்டில் ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் தலைப்பு தேர்வு செய்யாமலேயே படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

அப்படி தொடங்கும் படங்களின் தலைப்பாக அந்த நடிகருக்கு அது எத்தனையாவது படம் என்ற எண்ணிக்கையையும் அந்த நடிகரின் பெயரையும் இணைத்தே அழைத்து வருகிறார்கள். இதை தற்போது இரண்டு முக நடிகரும் பின்பற்ற முடிவு செய்திருக்கிறாராம்.

பொதுமாக இரண்டு முக நடிகர் ஒப்பந்தமாகும் படங்கள் அனைத்துக்கும் முன்கூட்டியே தலைப்பு வைக்கப்பட்டு விடும். இதனால், அவருடைய படம் எந்த பரபரப்பும் இல்லாமல் உருவாகி, அது சத்தம் இல்லாமலேயே வெளிவந்து, நடிகரின் மார்க்கெட்டை பின்னு தள்ளி வருகிறதாம்.

இதை கருத்தில் கொண்ட இரண்டு முக நடிகர், இனிமேல், முன்னணி நடிகர்களைப் போலவே தன்னுடைய படத்துக்கும் தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பை தொடங்கி, அவர்களைப் போலவே தன்னுடைய படத்துக்கும் என்னுடைய பெயரை வைத்து ரசிகர்கள் அழைக்கட்டும் என்று விருப்பப் படுகிறாராம். இதனால், தானும் சினிமாவில் இருப்பதாக ரசிகர்கள் மனதில் பதியும் என்றும், தன்னுடைய படத்துக்கும் புரோமாஷன் கிடைக்கும் என்றும் நடிகர் நினைக்கிறாராம். 

Similar News