சினிமா

இளம் இயக்குனர் கேட்ட சம்பளத்தால் அதிர்ந்துபோன தயாரிப்பு நிறுவனம்

Published On 2017-01-13 13:27 GMT   |   Update On 2017-01-13 13:27 GMT
இளம் இயக்குனர் ஒருவர் கேட்ட சம்பளத்தால் தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் அதிர்ந்து போயுள்ளது. அது குறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தளபதி நடிகரை வைத்து தெறிக்கவிட்ட இயக்குனர் தனது அடுத்த படத்தையும் தளபதி நடிகரை வைத்து இயக்கவுள்ளது அனைவருக்கும் தெரிந்ததுதான். முந்தைய படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட்டதால் இந்த படத்திற்கு தனது சம்பளத்தை முந்தைய படத்தைவிட உயர்த்தி கேட்க இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். அதன்படி, தயாரிப்பு நிறுவனத்திடம் தனது சம்பளத்தை ரூ.15 கோடி வரை தரவேண்டும் என்று கேட்டாராம்.

அதோடு அவர் விட்டபாடில்லை. தனது படத்தின் உரிமையை மற்ற மொழிகளுக்கு கொடுத்தால், அதற்கு வாங்கப்படும் தொகையில் பாதியை தனக்கு தருமாறும் கேட்டுள்ளாராம். மூன்றாவது படத்திலேயே இவ்வளவு அடாவடியாக சம்பளம் பேசும் இயக்குனர் மீது அந்த தயாரிப்பு நிறுவனம் மிகவும் கோபத்தில் உள்ளதாம்.

இருப்பினும், தளபதி நடிகருக்காக இயக்குனர் சொன்னதையெல்லாம் காதுகொடுத்து கேட்டபடி இருக்கிறதாம். இதை தளபதி நடிகர் வசமும் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறதாம். அதன்பிறகு, தளபதி நடிகர் எடுக்கிற முடிவுதான் இப்படத்தின் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

Similar News