சினிமா

வருங்கால மனைவிக்கு கதை கேட்கும் இயக்குனர்

Published On 2016-12-05 04:56 GMT   |   Update On 2016-12-05 04:56 GMT
இயக்குனர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு கதை கேட்டு வருகிறாராம். அந்த இயக்குனர், வருங்கால மனைவி யார் என்பதை கீழே பார்ப்போம்.
நயன நடிகையும் சிவமான இயக்குனரும் காதலர்களாக வலம் வருவது ஊர் அறிந்ததே. இவர்கள் இருவரும் தனிமையில் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கோலிவுட்டில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதுநாள் வரையில் இதுகுறித்து இருவருமே மௌனம் காத்து வருகிறார்கள்.

இந்நிலையில், முன்பெல்லாம் படங்களில் நடிக்க தனது அபிமானிகளிடம் கதைகளை பற்றி பேசி முடிவெடுத்து வந்த நயன நடிகை, இப்போது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் தன்னை தொடர்பு கொண்டாலே, முதலில் தனது காதல் இயக்குனரை போய் பாருங்கள் என்று அவர் பக்கம் திருப்பி விடுகிறாராம்.

அதனால், நயன நடிகையின் கால்ஷீட் வாங்க வருவோர் இயக்குனரைத்தான் துரத்திக் கொண்டு வருகிறார்களாம். இப்படி துரத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருப்பதால், ஏற்கெனவே கேட்கப்பட்ட கதைகள் இன்னும் பல கிடப்பில் இருப்பதாகவும், கைவசம் நயன நடிகைக்கு அதிக படங்கள் இருப்பதாலும் இந்த படங்களையெல்லாம் முடித்த பிறகுதான் நடிகையின் கால்ஷீட் கிடைக்கும் என இயக்குனர் அனைவரையும் திருப்பி அனுப்புகிறாராம்.

அப்படி அவர்களுக்கு கால்ஷீட் கொடுப்பதாக இருந்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் தேதியில் கொடுக்க மாட்டாராம். அவர் முடிவு பண்ணும் தேதியில்தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று இயக்குனர் கண்டிஷன் போடுகிறாராம். இருப்பினும் நடிகையின் மார்க்கெட் கருதி பல இயக்குனர்கள் கதைகளை சொல்லிவிட்டு அவரது கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்களாம். 

Similar News