சினிமா

புரோமோஷனுக்கு வர முரண்டு பிடிக்கும் இன்னொரு நடிகை

Published On 2016-08-28 12:25 GMT   |   Update On 2016-08-28 12:25 GMT
நயன நடிகையை தொடர்ந்து படங்களின் புரோமோஷனுக்கு வர மற்றொரு நடிகை ஒருவரும் முரண்டு பிடிக்கிறாராம். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்...
நயன நடிகை தான் நடிக்கும் எந்த படத்தின் புரோமோஷனுக்கு வருவதில்லை என்று முரண்டு பிடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது அவரது வரிசையில் இன்னொரு நடிகையும் இனிமேல் படத்தில் நடிப்பதோடு சரி, புரோமோஷன்களில் கலந்துகொள்ளவது கிடையாது என்ற முடிவில் இருக்கிறாராம்.

அவர் வேறு யாருமல்ல, பிரம்மாண்ட படத்தில் நடித்த அவந்திகா நடிகைதான். இவர் ஆரம்பத்தில் இவர் நடிக்கும் படங்களின் புரோமோஷன்களில் எல்லாம் கலந்துகொண்டார். ஆனால், தற்போது இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட் லிஸ்டில் இருப்பதாலும், அவரைத் தேடி நிறைய படங்கள் வரத்தொடங்கியதாலும் இனிமேல் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாராம்.

அதையும் மீறி மிகப்பெரிய நடிகர்களுடைய படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் என்றால், அதில் கலந்துகொள்வதற்காக மிகப்பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் அவர்மீது மிகுந்த வெறுப்பில் இருக்கிறார்களாம்.

Similar News