சினிமா

மாமனாருக்கு பயப்படும் பால் நடிகை!

Published On 2016-08-15 11:44 GMT   |   Update On 2016-08-15 11:44 GMT
பால் நடிகை ஒருவர் தனது மாமனாருக்கு பயப்படுகிறாராம். அது எதற்காக? என்பதை கீழே பார்ப்போம்...
பால் நடிகை காதலித்து கரம்பிடித்த கணவரை விவாகரத்து செய்வதற்காக கோர்ட் படியேறி இருக்கிறார். இவர்கள் இருவரும் பிரிவது தற்போது உறுதியாகிவிட்டாலும், இன்னமும் தனது மாமனாரை கண்டு பயப்படுகிறாராம். காரணம் என்னவென்று விசாரிக்கையில், பால் நடிகையின் மாமானார் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

பால் நடிகை தற்போது அவரது மகனை விவகாரத்து செய்ய முடிவெடுத்துள்ளதால், அந்த தயாரிப்பாளர் மேல் உள்ள மரியாதையில் பல தயாரிப்பாளர்கள் பால் நடிகையை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு தயங்குகிறார்களாம். ஏற்கெனவே கமிட்டாகியிருந்த படங்களில் இருந்தும் பால் நடிகையை சிலர் தூக்கிவிட்டார்களாம். இதனால், பால் நடிகையின் மார்க்கெட் கிட்டத்தட்ட சரிந்துவிட்டது என்றே கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதற்காகவே அவரை விவாகரத்து செய்ய பால் நடிகை முடிவு செய்திருந்தார். ஆனால், மாமனாரால் தற்போது சினிமாவில் நடிப்பதற்கு வழியே இல்லாமல் போய்விட்டதால் என்ன செய்வது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறாராம். 

Similar News