சினிமா செய்திகள்

லண்டன் செல்லும் விஷால்- ஏன் தெரியுமா?

Published On 2024-01-30 07:31 GMT   |   Update On 2024-01-30 07:31 GMT
  • ’துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன் தொடங்கியது.
  • விஷால் மற்றும் மிஷ்கினுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் நிறுத்திவைக்கப்பட்டது.

கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'துப்பறிவாளன்'. இந்த படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா, அனு இமானுவேல், சிம்ரன், வினய் என பலர் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியைத் தேடி தந்தது.


இதைத்தொடர்ந்து, 'துப்பறிவாளன்' இரண்டாம் பாகம் சில வருடங்களுக்கு முன் தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடித்தனர். இதன் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான விஷால், மிஷ்கினை படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். பின்னர் இந்த படத்தைத் தானே இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.


இந்நிலையில், 'துப்பறிவாளன் 2' திரைப்படத்தின் பணிகளை விஷால் தொடங்கியுள்ளதாகவும் இப்படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக வரும் 1-ம் தேதி விஷால் லண்டன் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News