சினிமா செய்திகள்
சாகுந்தலம்
நான்காவது பாடலை வெளியிட்ட சமந்தா படக்குழு
- நடிகை சமந்தா தற்போது ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
சாகுந்தலம்
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் நான்காவது பாடலான 'மயக்கும் பொழுதே'பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் வரிகளில் சத்ய பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.