சினிமா செய்திகள்

ஆர்.என்.ரவி - பா.இரஞ்சித்

ஆளுநர் பொது சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.. பா.இரஞ்சித் ஆதங்கம்

Published On 2023-04-07 10:25 GMT   |   Update On 2023-04-07 10:25 GMT
  • ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர்.
  • ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

இந்திய சிவில் சர்வீஸ் பணித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்டி, ராஜ்பவனில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

ஆர்.என்.ரவி

நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதி வந்துள்ளது. நாட்டில் பல பயங்கரவாத செயல்களுக்கு அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்றவர்களில் 90 நபர்களை இந்த அமைப்பே அனுப்பி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர். என்று கூறினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.


பா.இரஞ்சித்

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு இயக்குனர் பா.இரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஆளுநர் தன்னுடைய வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார். அவரின் போக்கு மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து ஏதாவது பேசி பொது சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். எந்த தகவலின் அடிப்படையில் ஆளுநர் இவ்வாறு பேசுகிறார் என்பது தெரியவில்லை. ஆளுநரின் பேச்சு தவறுதான் அதனை ஏற்க முடியாது. என்று கூறினார்.

Tags:    

Similar News