சினிமா செய்திகள்

நிறைய பிரார்த்தனைகள் செய்தேன்.. பரிசுகளை கேட்டு அல்ல, அமைதியை கேட்டு.. சமந்தா உருக்கம்

Published On 2023-06-16 12:49 IST   |   Update On 2023-06-16 12:49:00 IST
  • சமந்தா தற்போது குஷி மற்றும் சிட்டாடல் படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
  • மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிறதாக சமந்தா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சாகுந்தலம் கலவையான விமர்சனங்களை பெற்றது.



யசோதா படத்தின் புரொமோஷன் பணிகளில் கலந்து கொண்ட சமந்தா ஒரு நேர்காணலில் தனக்கு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதன்பின்னர் அதிலிருந்து தான் மீண்டு வருவதாக தெரிவித்து, தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுப்பட்டார். தற்போது குஷி மற்றும் சிட்டாடல் படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.



இந்நிலையில் சமந்தா மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ளதை உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் நிறைய பிரார்த்தனைகள், பூஜைகள் செய்தேன். ஆசிர்வாதங்களையும், பரிசுகளையும் கேட்டு அல்ல, வலிமையையும், அமைதியையும் கொடுக்க வேண்டினேன். எதுவும் நாம் நினைத்தது போல் நடக்காது என்பதை இந்த ஒரு வருட காலம் எனக்கு உணர்த்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News