சினிமா செய்திகள்

சூர்யா

"அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே".. நடிகர் சூர்யாவின் கலாய்..

Published On 2022-09-06 14:42 GMT   |   Update On 2022-09-06 14:42 GMT
  • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா.
  • இவர் தனது 25-வது ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடி வருகிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் சினிமா திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தனது 25-வது ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடி வருகிறார். திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில், "கனவு காணுங்கள், நம்புங்கள்" என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.


சூர்யா - கார்த்தி

இதனிடையே நடிகர் கார்த்தி, சூர்யா குறித்து தனது இணைய பக்கத்தில், "அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்ற இரவும் பகலும் உழைத்தார். அவர் தன் சொந்த சாதனையை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு நபராக, அவர் ஏற்கனவே தாராளமான இதயத்தை இன்னும் பெரிதாக்கினார் மற்றும் ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார்." என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கார்த்தியின் பதிவை பகிர்ந்துள்ள சூர்யா "வந்தியத்தேவா... அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே" என கிண்டலாக பதிவிட்டுள்ளார். சூர்யா கிண்டலாக பகிர்ந்துள்ள இந்த பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.


Tags:    

Similar News