null
இந்திய குடியுரிமை பெற்ற நடிகர் அக்ஷய்குமார்.. வாழ்த்தும் ரசிகர்கள்
- நடிகர் அக்ஷய்குமார் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
- இவர் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார்.
தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வரும் அக்ஷய் குமார் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
என்னதான் இந்திய படங்களில் நடித்தாலும் நடிகர் அக்ஷய் குமார் கனடா நாட்டு குடிமகன் தான் என பலர் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், இவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதற்கான சான்றை பகிர்ந்து தனது சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அக்ஷய்குமார் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய பாஸ்போர்டுக்காக விண்ணப்பித்ததாகவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது என அவர் தெரிவித்திருந்தார்.